Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாகுபலி சிவகாமி ஆபாச பட நடிகையாக மாற என்ன காரணம்..! - நடிகை ரம்யா கிருஷ்ணன் விளக்கம்


பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமியாக வந்து மிரட்டிய நிலையில், அடுத்து சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாச பட நடிகையாக நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். படையப்பா படத்தில் வில்லியாக நடித்து பெரிய வரவேற்பை பெற்றுவிட்டாலும், ரம்யா கிருஷ்ணனை கொண்டாடியது தெலுங்கு திரையுலகம் தான். 

எனினும், தமிழில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. அதை தொடர்ந்து பஞ்சதந்திரம், பாட்டாளி உட்பட சில அம்மன் படங்களில் நடித்தார். பிறகு, திருமணம் செய்து கொண்ட அவர், படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். மேலும், பல படங்களில் பாடல்களில் மட்டும் கௌரவத் தோற்றத்தில் நடித்தார். அந்த பாடல்கள் அனைத்தும் இன்றும் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுவையாக இருக்கின்றன. பிறகு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த அவருக்கு, பாகுபலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

முதன்முறையாக அந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரம்யாவுக்கு பாராட்டுதல்கள் குவிந்தன. ஒரேநாளில் இந்திய சினிமா முழுக்க பிரபலமடைந்தார். பாகுபலி படத்தி இவருடைய சிவகாமி கதாபாத்திரம், அப்படத்தின் கதாநாயகன் கதாபாத்திரத்தை விட பலரையும் பேச வைத்தது. மேலும், பாகுபலி இரண்டாம் பாகமும் ரம்யா கிருஷ்ணன் நடிப்புக்கு சிவப்புக் கம்பள வரவேற்பை அளித்தது. 

பாகுபலிக்கு பிறகு பல படங்களில் அவர் நடித்துவிட்டாலும், தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, சமந்தா நடித்திருக்கும் இந்த படத்தில் லீலா என்ற கதாபாத்திரத்தில் ரம்யா நடித்துள்ளார். 

முக்கியமாக இந்த படத்தில் அவர் ஆபாச படங்களில் நடிக்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது அதற்கு அவர் விளக்கம் அளித்தார். பாகுபலி படத்திற்கு பிறகு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன். 

அந்த நேரத்தில் சூப்பர் டீலக்ஸ் வாய்ப்பு வந்தது. லீலா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க பல காட்சிகளுக்கு அதிக டேக் வாங்கினேன். குறிப்பிட்ட ஒரு காட்சியில் நடிக்க 37 டேக் வரை ஆனது. இதுபோன்ற சம்பவம் என் முதல் படத்தில் கூட நடந்தது கிடையாது. ட்ரெய்லரை வைத்து படத்தின் கதையை கண்டுப்பிடிக்க முடியாது. 

ஆனால், இயக்குநர் தியாகராஜன் குமாராஜா முழு திறமையையும் வாங்கி படத்தில் நடிக்க வைத்தார். ஏன் லீலா கதாபாத்திரத்தில் நடித்தேன் என்பது குறித்து இப்போது பதில் சொல்ல முடியாது. அது படத்தின் எதிர்பார்ப்பை கெடுத்துவிட்டும் என்று கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement